“மதத்தை விட மனிதநேயம் முக்கியம்”
முதுகில் தூக்கி சுமந்து இந்து மக்களின் உயிரை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்
பஹல்காம் தாக்குதல் சம்ப வத்தின் மூலம் பாஜக - ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் முஸ்லிம் மக்களை குற்ற வாளியாக சித்தரித்து அவதூறு பரப்பி வருகிறது. ஆனால் தாக்கு தல் நடந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் தான் மத வேறுபாடின்றி பெரும்பாலான இந்து மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். பஹல்காம் பகுதியைச் சேர்ந்த சஜத் அகமது என்ற முஸ்லிம் இளைஞர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த இந்து மதத்தைச் சேர்ந்தவரை முதுகில் தூக்கி உயிரை காப் பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காணொலி சமூகவலைத்தளங்களில் வைர லாகி வரும் நிலையில், சஜத் அக மது அளித்த பேட்டியில், “தாக்கு தல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்ததும் நாங்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களுக்கு உதவினோம். நடக்க முடியாத வர்களை தூக்கிக் கொண்டு வந்தோம். மதத்தை விட மனித நேயம் முக்கியம். எங்களின் உயிர்களை பற்றி நாங்கள் கவ லைப்படவில்லை. சுற்றுலா பய ணிகள் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் என் கண்களில் கண் ணீர் வழிந்தது” என அவர் கூறி னார்.